2991 மில்லியன் பணத்தை தவறாக பயன்படுத்தியமை - பசிலுக்கு நீதிமன்ற நோட்டீஸ்
கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2991 மில்லியன் ரூபா பணத்தை தவறாக பயன்படுத்திய சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பிலான சாட்சி விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 08ம் திகதி மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு கூறி முறைப்பாட்டு சாட்சியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க உத்தரவிட்டுள்ளார்.
07 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்ட மா அதிபரினால் குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment