Header Ads



வெள்ளவத்தை கடலில், 15 அடி திமிங்கிலம் மீட்பு


வெள்ளவத்தை கடலில் உயிரிழந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

கரை ஒதுங்கிய திமிங்கிலம் கிட்டத்தட்ட 15 அடி நீளத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திமிங்கிலத்தை பார்வையிடுவதற்கு மக்கள் அதிகமாக வருவதனால் அந்த பகுதி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

திமிங்கிலம் உயிரிழந்து பல நாட்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.