Header Ads



12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்

கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை(18) காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரையில் 12மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கள்மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

களனி பிரதேச சபையை சேர்ந்த பகுதிகள், பேலியகொட நகர சபையை சேர்ந்த பிரதேசங்கள், வத்தளை நகர சபையை சேர்ந்த பிரதேசங்கள், ஹெந்தல பிரதேச சபையை சேர்ந்த பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொது மக்கள் முன் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.