Header Ads



ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் மூடப்படுகிறது

-ARA.Fareel-

ஒலுவில் மீன்­பிடித் துறை­மு­கத்தைப் பரா­ம­ரிக்கும் செல­வீ­னத்தை ஈடு­செய்ய முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளதால் அர­சாங்கம் ஒலுவில் மீன்­பிடித் துறை­மு­கத்தை மூடி­வி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கடற்­றொழில் மற்றும் நீரி­யல்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர நேற்றுமுன்தினம் அமைச்சு அதி­கா­ரி­க­ளுடன் நடத்­திய கலந்­து­ரை­யா­ட­லி­னை­ய­டுத்து இத்­தீர்­மா­னத்தை மேற்­கொண்­டுள்ளார்.

இம் மீன்­பிடித் துறை­மு­கத்தின் செல­வு­க­ளுக்­கான வரு­மா­னம் ஈட்­டப்படுவ­தில்லை என்­பது கலந்­து­ரை­யா­டலின் போது தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டது. இத்­து­றை­முகம் ஒரு வெள்ளை யானை எம்மால் இதனை பரா­ம­ரிக்க முடி­யாது என அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். 

ஒலுவில் துறை­முகம் ஒரு மீன்­பிடித் துறை­மு­க­மாகும். 2013 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் இத்­து­றை­முகம் திறந்து வைக்­கப்­பட்­டது. கிழக்கின் எழுச்சி வேலைத்­திட்­டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. 

உகந்த  சூழல் மதிப்­பீடு மற்றும் சாத்­தி­யப்­பா­டுகள் எதுவும் கவ­னத்திற் கொள்­ளப்­ப­டாது ஒலுவில் துறை­முக  நிர்­மாணப் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தாக அமைச்சின் அதி­கா­ரிகள் குற்றம் சுமத்­து­கின்­றனர்.

250 க்கும் மேற்­பட்ட மீன்­பிடிப் பட­குகள் நங்­கூ­ர­மி­டப்­ப­டு­வ­தற்கு திட்­ட­மிட்டு இத் துறை­முகம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டாலும் தற்­போது மீன்­பிடிப் பட­குகள் அனைத்தும் துறை­மு­கத்­துக்கு வெளியே நங்­கூ­ர­மி­டப்­பட்­டுள்­ளன. துறை­மு­கத்­துக்குள் பட­குகள் பிர­வே­சிப்­பது ஆபத்­தா­ன­தா­க­வுள்­ளது.

சுமார் 40 மில்­லியன் கியுபிக் மீட்டர் மணல் இப் பகு­திக்குள் நிறை­வதால் அம் மணலை அப்­பு­றப்­ப­டுத்­து­வ­தற்கு அமைச்சு சுமார் 350 மில்­லியன் ரூபா­வினை செல­விட வேண்­டி­யுள்­ளது. இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு தடவை இவ்­வாறு அமைச்சு செல­வீ­னங்­களை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ளது என கடற்­றொழில் மற்றும் நீரி­யல்­துறை அமைச்சின் அதி­காரி தர்ம வன்னி நாயக்க தெரி­வித்தார்.

கடற்­றொழில் மற்றும் நீரி­யல்­துறை அமைச்சு இவ்­வி­வ­காரம் தொடர்பில் துறை­முக அதி­கார சபை, மீன்­பிடி துறை­முக கூட்­டு­தா­பனம் மற்றும் கரை­யோர பாது­காப்புத் திணைக்­களம் என்­ப­வற்­றுடன் பேச்­சு­வார்த்தை நடத்தத் தீர்­மா­னித்­துள்­ளது. அமைச்சர் மஹிந்த அம­ர­வீர ஒலுவில் துறை­மு­கத்தை மூடு­வது பற்றி அர­சாங்­கத்­து­டனும் பேசவுள்ளார்.

குறிப்பிட்ட துறைமுகம், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சிலிருந்து இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு மாற்றப்பட திட்டமிட்டிருந்தாலும் அத் திட்டம் அண்மையில் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.