திஹாரியைச் சேர்ந்தவரே, விமானத்தில் மரணமான பெண்
குவைத்தில் இருந்து இலங்கை வந்த விமானம் ஒன்றில், இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குவைத்தில் இருந்து இன்று அதிகாலை 4.50 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி பெண் 64 வயதுடையவர் என்றும், குவைத்தில் பணியாற்றும் தன் கணவனைச் சந்தித்துவிட்டு நாடு திரும்பும்போதே அவர் மரணமானதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திஹாரிய பகுதியைச் சேர்ந்தவராகக் கூறப்படும் இந்தப் பெண்ணின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. எனினும், மரணத்துக்கான காரணம் எதுவும் இதுவரை அறியத்தரப்படவில்லை.
Post a Comment