கொழும்பு குப்பை புத்தளத்தில் கொட்டப்படும், ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாதென எச்சரிக்கை
-D c-
புத்தளத்துக்கு கொழும்பு குப்பை வேண்டாம் எனக் கூறி இன்னுமொரு மீதொடமுல்ல போன்ற அனர்த்தத்தை ஏற்படுத்த வேண்டாம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இன்று -20- சுகுருபாயவில் அமைந்துள்ள மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த பிரச்சினையை விஞ்ஞான ரீதியாக தீர்ப்பதற்கு இடமளிக்குமாறு இதன்போது அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
புத்தளம் அருவக்காடு பகுதியில் இந்த குப்பை சேகரிக்கும் இடத்தை அடுத்த இரண்டு வருடங்களில் செயற்படுத்துவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
let Mr.champika build a dumping yard near his house
ReplyDelete