Header Ads



கூட்டு எதிர்க்கட்சியின் ஆயுள் நிறைவடையும் - ராஜித

கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனித கொலைகள், ஊழல் மற்றும் மோசடி அனைத்து தகவல்களும் விரைவில் வெளிப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் எதிர்வரும் ஓர் இரு மாதங்களில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கெபத்திகொல்லாவ வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல்கள் வெளியாகியதன் பின்னர் கூட்டு எதிர்க்கட்சியின் ஆயுள் நிறைவடையும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி காலி முகத்திடலுக்கு வந்த பின்னர் அரசாங்க நிறுவனங்களை சுற்றி வளைப்பதாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், காலி முகத்திடலுக்கு அருகில் பல வீதிகள் உள்ளமையினால் சுற்றிவளைக்க வாய்ப்புகள் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினரின் கருத்துக்களுக்கு அமைய மக்கள் அதில் கலந்துக் கொள்ளப்போவதில்லை என் தான் நம்புவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. எத்தனை நாட்களுக்கு இதேபோல கதை சொல்வார்கள்... எங்களுக்கு நிச்சயமாக தெரியும் இது எதுவும் நடக்காது... நல்லாட்சி ஊழல் வாதிகள் அதற்கு விடமாட்டார்கள்... பொது மக்களை மடயர்களாக்க வேண்டாம்... மக்கள் நல்லாட்சி ஊழல் வாதிகளை நம்ப தயாரில்லை... உங்களின் தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள்...

    ReplyDelete

Powered by Blogger.