Header Ads



குப்பை மேடு சரிவு: காரணம் என்ன..? மகிந்த மகிந்த விளக்குகிறார்

அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான இழுபறி நிலைமை காரணமாக மீதொட்டுமுல்லை குப்பை மேடு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமல் போனதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இன்று காலை நடைபெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பெரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் நிரந்தர தீர்வை காண்பதற்கான வேலைத்திட்டத்தை செயற்படுத்த வேண்டும்.

அத்துடன் மக்கள் வாழ்வதற்கு தேவையான சுற்றாடலில் வீடுகளை நிர்மாணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. You also have portion of the BLAME on this issue.. As you ruled the country... and this problem was existed at that time..

    Did you arrange them houses in different area ? Or Did you control the authority from piling the dirt in this location.

    All Politicians with no difference .. Make everything for their political gains but not look at the poor people needs.

    ReplyDelete

Powered by Blogger.