Header Ads



மஹிந்த அணிக்கு, கபீர் ஹாஸிமுடைய நக்கல் பேச்சு..!

மே தினக் கூட்டத்தை நடத்த காலிமுகத்திடல் போதாது எனக் குறிப்பிட்டவர்களுக்கு, கிராமத்திலுள்ள மயானத்தை வழங்கியிருக்கலாம் என அமைச்சர் கபீர் ஹாஸிம் மஹிந்த அணியினருக்குத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த அணியின் மே தினக் கூட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

சிலர் மே தினக் கூட்டத்தை நடத்த ஒவ்வொரு இடத்தைக் கேட்டனர். நாம் அதைத் தடுக்க முயற்சிக்கவில்லை.

தமது மே தினக் கூட்டத்தை நடத்த காலி முகத்திடல் போதாது, சில நேரங்களில் அதற்கு அருகிலுள்ள துறைமுக நகரத்திலும் மக்களை நிறுத்தவேண்டி ஏற்படும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கூறியதை ஊடகங்களில் காணமுடிந்தது.

இந்த நிலையில், நேற்று நான் காலி முகத்திடலுக்குச் சென்று பார்த்தேன். சிறிய இடத்தில்தான் அவர்கள் தமது மேடையை அமைத்துள்ளனர்.

அப்படியாயின், அவர்களுக்கு மே தினத்தை நடத்த கிராமத்திலுள்ள மயானத்தை வழங்கியிருக்கலாம் என தமக்கு அப்போது தோன்றியதாக அமைச்சர் கபீர் ஹாஸிம் கூறியுள்ளார்.

கொழும்பில்தான் மே தினத்தை நடத்தவேண்டுமாயின், கொழும்பின் பாடசாலையொன்றின் கரப்பந்தாட்ட மைதானத்தை வழங்கியிருக்கலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.