"மீதொட்டமுல்ல சோகமயம்" வபாத்தாகியவர்களின் ஜனாசாக்கள் நல்லடக்கம்
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் பலியாகிய முஸ்லிம்களின் ஜனாசா நல்லடக்கம் நேற்று இடம்பெற்றுள்ளது.
மேலும் ஐவரின் உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன.
12 பேரின் உடல்கள் தற்போது கொலன்னாவ பிரதேசத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதிக்கிரியைகள் இடம்பெறுகின்றன.
இதில் மக்கள் அனைவரும் மிகுந்த சோகத்துடனும், கவலையுடனும் காணப்படுகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் உடல்களும் இதில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் மேலும் பலர் காணாமல் போயுள்ள நிலையில் மூவர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
Post a Comment