Header Ads



கந்தூரி சாப்பாட்டில் வபாத்தானவர்களின் விபரம்..! நடைபாதையிலும், வைத்தியசாலை முன்றலிலும் சிகிச்சை

இறக்காமத்தில் உணவு நஞ்சான சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பாடசாலை வீதி, இறக்காம் - 06 ஐச் சேர்ந்த, ஆதம்பாவா அபூபக்கர் காசிம் (53), 
ஓட்டுத் தொழிற்சாலை வீதி, இறக்காமம் 06 ஐச் சேர்ந்த மஜீத் ஹலீமா (48) 
அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதோடு, 

சபா வீதி, இறக்காமம் 04 ஐச் சேர்ந்த மரியம் கண்டு (65) என்பவர்
சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மரணமடைந்துள்ளார்.
இதேவேளை, மிக சிறிய வைத்தியசாலையான இறக்காமத்தில் 11 கட்டில்களே காணப்படுவதோடு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், நடைபாதையிலும் வைத்தியசாலையின் முன்றலிலும் கூடாரங்கள் போன்று அமைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கல்முனை, அக்கரைப்பற்று, அம்பாறை, சம்மாந்துறை, மட்டக்களப்பு உள்ளிட்ட குறித்த பிரதேசத்தைச் சூழவுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலுமிருந்து அம்பியுலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டோரை, குறித்த வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நேற்று (06) பிற்பகல் இடம்பெற்ற குறித்த கந்தூரி வைபத்தின்போது, ஆரம்பத்தில் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்ட குறித்த பிரதேச (வாங்காமம்) மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அதன் பின்னர் சமைத்த உணவே இவ்வாறு நஞ்சாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உணவுகளைத் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து, சுகாதார மருத்துவ அதிகாரிகளால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, பயன்படுத்தப்பட்ட பொருட்களில் எவ்வித காலாவதியான பொருட்களும் காணப்படவில்லை என ஆரம்ப கட்ட பரிசோதனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் வயதானவர்களும், சிறுவர்களுமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. இன்னா லில்லாஹி வ இனா இலைஹி ராஜியூன்...
    அன்மைக்காள மாக கிழக்கை மையப்படுத்தி நடைபெறும் நோய்களும்
    செயற்கை அனர்த்தங்களும். சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. இவைகள் தற்செயலாக நடப்பது போல் தெரிய வில்லை அல்லாஹ் நம் மக்களை பாதுகாக்க துஆ செய்வோம்..

    ReplyDelete
  2. அறிவில்லாமல் பேசாதீர்கள். சோனகன் இருக்குமிடமெல்லாம் அசுத்தம் அதுதான் நோய்ககளுக்கு காரணம். Sinhalese உம் நோயால் பாதிப்புற்று இறக்கிறார்கள். சும்மா குழப்ப வெண்டாம்

    ReplyDelete
  3. உங்களை போன்ற அறிவில் சிறந்த வர்கள் இருக்கும்போது ஏன் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கவேண்டும் . சிறந்த ஆலோசைகளை வழங்கலாம் அல்லவா? கிழக்கில் சிங்கள வர்கள் இறந்த ஒரு செய்தியை காட்டுங்கள் ..சந்தேகமும் கவலையும் குழப்பத்தை உண்டாக்கும் என்று சொல்லும் மேதையே கொஞ்சம் விளங்க தாருங்களேன்..

    ReplyDelete

Powered by Blogger.