பாகிஸ்தானின் அரிசி, ஜனாதிபதியிடம் நேரடியாக கையளிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க பாகிஸ்தான் அரசு 10 ஆயிரம் மெற்றிக் டொன் அரிசியை அன்பளிப்புச் செய்துள்ளது.
அரிசி தொகையை வழங்கும் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றதாக ஜனதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
இதன் அடிப்படையில், முதல் கட்டமாக பாகிஸ்தான் 7 ஆயிரம் மெற்றிக் டொன் அரிசியை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது. இதேவேளை, இந்த நிகழ்வில் பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் கலந்து கொண்டுள்ளார்.
முஸ்லீம் நாடுகள் இலங்கைக்கு அதிகமான உதவிகளை செய்து வருகின்றன
ReplyDelete