Header Ads



இறக்­காமத்தில் புத்தர் சிலைக்கு எதிராக, ஒன்றுபட்ட முஸ்லிம்கள்

 -Vi-

அம்­பாறை இறக்­காமம் பிர­தேச சபைக்­குட்­பட்ட மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையை இரண்­டா­வது தட­வை­யா­கவும் ஆக்­கி­ர­மிக்கும் முயற்சி நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது. இங்கு விகாரை ஒன்றை அமைப்­ப­தற்கு பௌத்த பிக்­கு­களும் மேலும் சிலரும் முயற்­சி­களை மேற்­கொண்­டனர். எனினும் ஸ்லத்­திற்கு விரைந்த இறக்­காமம் பிர­தேச மக்கள் மேற்­படி விகாரை அமைக்கும் முயற்சி நட­வ­டிக்­கை­க­ளுக்கு கடும் எதிர்ப்­பினை தெரி­வித்­த­துடன் பொலி­ஸாரின் கவ­னத்­துக்கும் கொண்டு வரப்­பட்­டது. இதன்­போது இப்­பி­ர­தே­சத்தில் பதற்ற நிலை குடிகொண்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து பொலிஸார் தலை­யீடு செய்து விகாரை அமைக்கும் பணி­களை தடுத்து நிறுத்­தினர்.

இங்கு 150 க்கும் மேற்­பட்ட தமிழ் குடும்­பங்கள் வாழ்ந்­து­வரும் அதே­வேளை மாயக்­கல்வி மலையை சுற்­றி­யுள்ள காணிகள் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மா­ன­தாகும். சம்­பவம் தெடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது;

செவ்­வாய்க்­கி­ழமை மாலை இம்  மலை­ய­டி­வா­ரத்­திற்குச் செல்­வ­தற்­கான வீதியும் விகாரை அமைப்­ப­தற்­கான காணி­யி­னையும் கன­ரக வாகனம் கொண்டு பௌத்த பிக்­குகள் சிலரால் பண்­ப­டுத்­தினர். இது தொடர்பில் காணிச் சொந்­தக்­காரர் ஒருவர் தமண பொலிஸில் இது சம்­பந்­த­மாக முறைப்­பாடு செய்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து நேற்று வியா­ழக்­கி­ழமை காலை மலை­ய­டி­வா­ரத்தில் நிர்­மாணப் பணிகள் நடை­பெ­று­வ­தாகக் கிடைத்த தக­வ­லை­ய­டுத்து பள்­ளி­வாசல் ஒலி­பெ­ருக்கி மூலம் அற­வித்­ததன் பின்னர் உட­ன­டி­யாக பிர­தேச மக்கள் மாயக்­கல்வி மலை­ய­டி­வா­ரத்­திற்கு சென்று பௌத்த தேரர்­க­ளுடன் கடும் வாதப் பிர­தி­வா­தங்கள் நடை­பெற்ற நிலை­யி­லேயே அம்­பாறை பிராந்­திய உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் மனோஜ் ரண­கல, தமண பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி அர்ஷ சில்வா ஆகியோர் ஸ்தலத்­திற்கு விஜயம் செய்து நிலையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­தனர்.

அதன் பின்னர் ஒன்­று­கூ­டிய அனை­வரும் இறக்­காமம் பிர­தேச செய­லாளர் காரி­யா­லயம் சென்று செய­லாளர் எம்.எம். நஸீரைச் சந்­தித்து நடந்த விட­யங்­களை ஆக்­ரோ­சத்­துடன் எடுத்துக் கூறினர். சிலை அமைந்­துள்ள இடத்­திற்கு பொலிஸார் செய­லா­ளரை அழைத்­த­போதும் வராத நிலை அறிந்த மக்கள் செய­லா­ள­ருக்கு தங்­க­ளது கண்­ட­னங்­க­ளையும் தெரி­வித்­தனர்.

இதே­வேளை, விடயம் அறிந்த கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் ஆரிப்­சம்­சுதீன், இறக்­காமம் பிர­தேச அபி­வி­ருத்திக் குழு தலைவர் எஸ்.ஐ. மன்சூர், சுகா­தார அமைச்­சி­னது இணைப்புச் செய­லாளர் எம்.எஸ். ஜெமீல் காரி­யப்பர், முன்னாள் பிர­தேச சபை தவி­சாளர் எம்.ஐ. நைஷார் சட்­டத்­த­ரணி பாறூக் ஆகியோர் வருகை தந்து பௌத்த குருக்­க­ளுடன் தமது பிர­தேச மக்­களின் எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தி­யமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இவ்­வே­ளையில் வருகை தந்த தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரிகள் தொல்­பொருள் பிர­தேச எல்­லைக்கு வெளியே தனியார் காணியில் நிர்­மாணப் பணிகள் நடை­பெ­று­வதை அனு­ம­திக்க முடி­யாது எனவும் தெரி­வித்தார். எனினும் இதற்­கு­ரிய எல்­லையை சீரான முறையில் வரை­யறை செய்யும் முக­மாக இறக்­காமம் பிர­தேச செய­லா­ளரை ஸ்தலத்தில் நின்ற அம்­பாறை உதவிப் பொலிஸ் அத்தியட்சர் மனோஜ் ரணகல அழைத்த போது பிரதேச செயலாளர் வருகை தர மறுத்துவிட்டார்.

இதனையடுத்து நீதமன்றத்தின் மூலம் சமரச முடிவுக்கு வரும்வரை சகல நிர்மாணப் பணிகளும் நிறுத்துமாறு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பௌத்த பிக்குகளை கேட்டுக் கொண்டார். இதன் பின்னர் சுமுக நிலை ஏற்பட்டது.

No comments

Powered by Blogger.