Header Ads



ஜாமிஆ நளீமிய்யாவுக்கு, புதிய மாணவர் அனுமதி

பேருவைளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்துக்கு 2017 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் எதிர்வரும் 22ஆம் 23ஆம் திகதிகளில் காலை எட்டு மணி முதல் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

நேர்முக எழுத்துப் பரீட்சைகள் வடக்கு, வட மத்திய, வட மேல், மத்திய மற்றும் மேல் மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 22.04.2017 சனிக்கிழமையும் தெற்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 23.04.2017 ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது.

எழுத்துப் பரீட்சையில் மாணவரின் மொழித் திறன், பொது அறிவு, விவேகம் என்பன பரீட்சிக்கப்படும்.

சர்வதேச இஸ்லாமிய உலகின் பல்கலைக்கழகங்களது சம்மேளனத்தில் (Federation of the Universities of the Islamic World- FUIW) அங்கத்துவம் பெற்றுள்ள ஜாமிஆ நளீமிய்யாவின் பட்டச் சான்றிதழ் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை அதன் விஷேட அம்சமாகும்.

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் இலங்கையிலும் பட்டச் சான்றிதழ் வழங்கும் நிறுவனமாக அங்கீகாரம் பெறுவதற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் 0342276338, 0776504765, 0773573815 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு ஜாமிஆ நளீமிய்யா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


-ஜெம்ஸித் அஸீஸ்-

No comments

Powered by Blogger.