Header Ads



மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இந்த நியதிதான்..!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் கட்சியின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். கட்சியின் தீர்மானத்தை மீறும் நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்த நியதியே என்பதை மறந்துவிடக்கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரிக்கும் நகர்வுகளை மஹிந்த ராஜபக்ஷவே மேற்கொண்டு வருகின்றார் எனவும் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.