இலங்கையிலிருந்து தினமும், ஓமானிற்கு நேரடி விமானசேவை
இலங்கையிலிருந்து ஓமான் வரை தினமும் நேரடி விமான சேவை ஒன்றை தொடங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓமான் மற்றும் இலங்கையிற்கிடையிலான பயணத்தை இலகுவாக்கு முகமாக, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, மஸ்கட் விமான நிலையம் வரையான நேரடி விமானசேவையை தொடங்கவுள்ளது.
மேலும் குறித்த விமான சேவையானது வாரத்தில் 5 தடவைகள் இடம்பெறவுள்ளதாகவும், குறித்த பயண சேவையின் மூலம், ஓமானிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்தோடு விமானப்பயணத்தின் மூலமான சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக இந்தியா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கிடையியலான பயண சேவைகளிலும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment