Header Ads



"புத்தரின் பெயரில், எமது காணியை அபகரிக்காதே" - அம்பாறையில் பொங்கியெழுந்த முஸ்லிம்கள்

இறக்காமம் மாயக்கல்லியில் விகாரை அமைப்பதற்கு எதிராக அம்பாறையில் பல இடங்களிலும்  முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லிமலைப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் பெளத்த விஹாரை அமைக்க மேற்கொண்டுவரும் நில ஆக்கிரமிப்பைக் கண்டித்து பொதுநல அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களினால் இன்று வெள்ளிக்கிழமை(28) 

ஜூம்ஆத் தொழுகையின் பின்னர்  ஆர்ப்பாட்ட கண்டப்பேரணி முன்னெடுக்கப்பட்டது. பேரணியில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

“ஜனாதிபதியோ நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகளே, எங்களை அமைதியாக வாழ விடுங்கள்”, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரே புத்தரின் பெயரில் எங்களின் காணியை அபகரிக்காதே”, புத்தரின் பெயரில் காணி அபகரிப்பா”, “முஸ்லிம்களின் காணிகளை அபகரிப்பதுதான் நல்லாட்சி அரசாங்கமா”, ஒரு சிங்கள குடிமகனும் வாழ இடத்தில் எதற்கு பௌத்த விகாரை”, ஜனாதிபதியே மாயக்கல்லி மலையில் விஹாரை அமைக்கும் முயற்சியை நிறுத்த நடவடிக்கை எடுக்கள்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.