பள்ளிவாசல்களுக்கும், ஸியாரங்களுக்கும் நிரந்தர பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை
-விடிவெள்ளி-
நாடெங்குமுள்ள இஸ்லாமிய மத மரபுரிமைத் தலங்களான ஸியாரங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் சமயவிவகார மற்றும் தபால்,தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பாதுகாப்பு செயலாளர் மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
காலி கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தினுள் கடற்கரையில் அமைந்துள்ள முஸ்லிம்களின் மத மரபுரிமை ஸ்தலமான ஸியாரம் இனந்தெரியாதோரினால் தாக்கி சிதைக்கப்பட்டதையடுத்தே அமைச்சர் ஹலீம் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் காலி மாவட்டத்துக்குப் பொறுப்பான கலாசார உத்தியோகத்தர் பி.ரி.ஹனூன் ஸியாரம் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலான தகவல்களைத் திரட்டியுள்ளார். கடந்த வியாழக்கிழமை ஸியாரத்தை பராமரிக்கும் காலி முஸ்லிம் கலாசார நிலைய பணிப்பாளர்களுடன் இவ்விவகாரம் தொடர்பான கலந்துரையாடலொன்றும் நடைபெற்றது. கலாசார உத்தியோகத்தரின் அறிக்கை பாதுகாப்பு செயலாளர் மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
கடந்த வியாழக்கிழமை காலி கோட்டை பள்ளிவாசலில் காலி முஸ்லிம் கலாசார நிலைய பணிப்பாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பள்ளிவாசல் நிர்வாகிகளும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் காலி மாவட்டத்துக்குப் பொறுப்பான கலாசார உத்தியோகத்தரும் பங்கு கொண்டிருந்தனர்.
ஸியாரம் தாக்கப்பட்ட சம்பவம் காலி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.
இப்பகுதி முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மை சமூகத்துக்கும் மற்றும் இராணுவத்தினருக்குமிடையில் ஒற்றுமையை சீர்குலைத்து இப்பகுதியில் ஓர் அசாதாரண நிலையை உருவாக்குவதற்கு சிலரால் மேற்கொள்ளப்பட்ட சதி என முஸ்லிம் கலாசார நிலைய பணிப்பாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஸியாரத்தை தரிசிக்க இராணுவம் பொது மக்களுக்கு அனுமதி வழங்குவதில்லை. ஸியாரத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மார்க்க அறிஞரின் பரம்பரையினர் இந்தியாவிலிருந்து வருகை தந்தால் அவர்களுக்கு இராணுவம் அனுமதி வழங்குகிறது. அத்தோடு வருடாந்தம் இரு கந்தூரி வைபவங்களை நடாத்துவதற்கு அனுமதி வழங்குகிறது எனும் விபரங்கள் கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.
ஸியாரம் 800 வருட வரலாற்றினைக் கொண்டதெனவும் கடந்த 30 வருடகாலமாக கந்தூரி வைபவம் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி கந்தூரி வைபவத்தை நடாத்துவதற்கு ஸியாரத்தை பரிபாலிக்கும் நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பான பொலிஸாரின் விசாரணைகள் முற்றுப் பெற்றதன் பின்பு ஸியாரத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கு அனுமதியும் கோரப்பட்டுள்ளது.
ஸியாரத்தில் வருடாந்தம் இடம்பெறும் இரு கந்தூரி வைபவங்களுக்கு இராணுவத்தினரும் உதவிகள் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஸியாரத்தை இலகுவில் அடைவதற்கான வழி இராணுவ முகாம் வழியாகும். இராணுவ களஞ்சியசாலையையும் கடந்தே ஸியாரத்தை அடைய வேண்டியுள்ளது.
ஸியாரத்துக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்குமாறு ஸியாரத்தை பரிபாலிப்பவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Masjids it is ok to give protection what is that shrine ? what is the link between muslims and shrine. please blast all those shrines do not include those with muslims in sri lanka, who ever want to protect will sure go to hell insha allah
ReplyDeleteالتوحيد
ReplyDeleteஉண்மையான இஸ்லாத்தை பின்பற்றாத விளைவுகள் இப்படிப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கும்,வருடத்தில் இரண்டு கந்தூரி கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் சுன்னா வழியில் இல்லாமல் வயிறு வழர்க்கும் சுயநலவாதிகளின் கேடுகெட்ட போக்கால் எல்லா முஸ்லிம்களுக்கும் பிரச்சினை
ReplyDeleteபள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு ஓகே அனால் ஸியாரங்களுக்கு எதுக்கு பாதுகாப்பு??? கை கூப்பி வணங்கவா? இல்லை கந்தூரி கொடுக்கவா???
ReplyDelete