முஸ்லிம் கடைகள் மீது குண்டுவீச்சு, குற்றவாளிகளை கைதுசெய்ய சிங்கள சமூகம் கோரிக்கை
கொடப்பிட்டிய, போர்வை நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முஸ்லிம்களின் கடைகள் மீது மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
போர்வை நகர் வர்த்தக நிலையங்களுக்கு தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரசாயன பகுப்பாய்வு பிரிவினர் ஸ்தலத்துக்கு விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டனர். பள்ளிவாசலின் சி.சி.ரி.வி. கமெரா பதிவுகள் தெளிவாக இன்மையால் அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் பதிவுகளை பெற்றும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன ஆகியோர் இதுதொடர்பாக பூரண விசாரணையொன்றினை நடத்தி சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும்படி பொலிஸாருக்கு உத்தரவுகளை வழங்கியுள்ளனர்.
பிரதேச ஜம் இய்யத்துல் உலமா சபைக்கிளை மற்றும் பள்ளிவாசல் நிர்வாக சபை முஸ்லிம்களை பொறுமை காக்கும்படியும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி விட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன.
பெரும்பான்மை சமூகம் இப்பகுதியில் முஸ்லிம்களுடன் நல்லுறவினைப் பேணி வருவதால் வர்த்தக நிலைய தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்யுமாறு அச்சமூகமும் கோரிக்கை விடுத்துள்ளது.
ARA.Fareel
Post a Comment