முடிந்தால் ஆட்சியைக் கவிழுங்கள் - ரணில் ஜப்பான் சென்றுவிட்டார் - கபீர் ஹாஷிம்
அலரிமாளிகைகளை முற்றுகையிடுவதனை விட்டு போயா தினம் வரும் வரை காத்திருக்காமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பான் செல்கின்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுதந்திரக் கட்சியுடன இணைந்து முடியுமானால் ஆட்சியை கவிழ்த்து காட்ட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சவால் விடுத்தார்.
மஹந்தவின் கும்பலுக்கு நாம் பயந்தவர்களல்ல. கூட்டு எதிரணிக்கு பயந்தால் நாம் காலிமுகத்திடலில் மே தின கூட்டம் நடத்துவதற்கு இடமளித்திருக்க மாட்டோம். மஹிந்தவினால் நாட்டின் ஆட்சியை மாற்றி அமைக்க முடியாது. அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் வினவிய போதே கேசரி அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. எமது மே தின கூட்டத்திற்கே இலட்ச கணக்கான மக்கள் வருகை தருவார்கள். எனினும் கூட்டு எதிரணியின் மே தின கூட்டத்தின் போது அலரி மாளிகை, ஜனாதிபதி மாளிகைகளை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கும்பலுக்கு நாம் பயந்தவர்களல்ல. கூட்டு எதிரணிக்கு பயந்தால் நாம் காலிமுகத்திடலில் மே தின கூட்டம் நடத்துவதற்கே இடமளித்திருக்க மாட்டோம். எனவே மே தின கூட்டத்தை நடத்தட்டும். அதன் பின்னர் நடப்பதனை பார்ப்போம்.
மேலும் மே தின கூட்டம் நடத்துவதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அலரி மாளிகை, ஜனாதிபதி மாளிகைகளை முடக்குமவதற்கு இடமளிக்க மாட்டோம்.
அலரிமாளிகைகளை முற்றுகையிடுவதனை விட்டு போயா தினம் வரும் வரை காத்திருக்காமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பான் செல்கின்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுதந்திரக் கட்சியுடன் இணைந்து முடியுமானால் ஆட்சியை கவிழ்த்து காட்ட வேண்டும்.
மஹிந்தவினால் நாட்டின் ஆட்சியை மாற்றி அமைக்க முடியாது. நாட்டின் ஆட்சி மாறாது. ஐந்து வருடம் வரைக்கும் ஆட்சி நிலைத்து நிற்கும். இவர்களின் வாய் வார்த்தைகளினால் நாம் அச்சம் அடைய போவதில்லை.
only for 5 years;that what Mahinda wants.....
ReplyDelete