Header Ads



இணையத்தின் மூலம், பாஸ்போட் பெறலாம்..!

கடவுச் சீட்டுக்களை இணையத்தின் மூலம் அனுப்பி வைக்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் தயாராகி வருகிறது. 

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை நவீனப்படுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதற்குத் தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக கடவுச் சீட்டுக்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை இணையத்தின் மூலம் அனுப்பி வைக்கும் வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கான பணத்தை கிரடிட் காட்கள் மூலட் வழங்கவும் வாய்ப்பு கிட்டியுள்ளது. 

இவ் வருட இறுதிக்குள் இந்த வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

No comments

Powered by Blogger.