Header Ads



பொட்டு அம்மான் உயிருடன் இல்லை, பிரபாகரனும் உயிருடன் இருப்பதாக கதை கூறினார்கள்

புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்பது 100 வீதம் உறுதி என முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கபில ஹெந்தாவிதாரன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று பொட்டு அம்மான் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

பொட்டு அம்மான் மட்டுமன்றி போர் முடிவடைந்ததன் பின்னர் பிரபாகரனும் உயிருடன் இருப்பதாக கதை கூறினார்கள்.

போர் முடிய முன்னதாகவே பிரபாகரன் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார் என சிலர் கூறினார்கள்.

புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் மக்களிடம் பணம் திரட்டும் நபர்களே இதன் ஊடாக நன்மை ஈட்ட முயற்சிக்கின்றனர்.

எமக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி நந்திகடல் பகுதியில் 450 புலி உறுப்பினர்கள் தாக்குதல் நடத்திய வேளையில் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தினரின் தாக்குதல்களின் போது இந்த 450 புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். இந்தக் குழுவில் பொட்டு அம்மானும் உள்ளடங்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் நாம் பொட்டு அம்மானின் சடலத்தை அடையாளம் காணவில்லை. மேலும் இராணுவப் பாதுகாப்பு அரண்களை உடைத்துக் கொண்டு அதே தினத்தில் ஒர் நோயாளர் காவு வண்டி வந்ததாகவும் அந்த வண்டி வெடித்துச் சிதறியதாகவும் அதில் ஒர் சடலம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த சடலம் பொட்டு அம்மானினது என்றே கூறப்படுகின்றது. எவ்வாறெனினும் பொட்டு அம்மான் இல்லை என்பது நூற்றுக்கு நுறு வீதம் உறுதியானதாகும்.

கடல் வழியாக தப்பிச் செல்லவும் அந்த சந்தர்ப்பத்தில் வாய்ப்பு இருக்கவில்லை. கடற்படையினர் முல்லைத்தீவு கடற்பரப்பினை சுற்றி வளைத்திருந்தனர்.

அவ்வாறு இல்லையென்றால் பொட்டு அம்மான் இன்னமும் வன்னியில் ஒழிந்திருக்கத்தான் வேண்டும். இறுதியில் இவ்வாறான கதைகளின் ஊடாக நன்மை பெற்றுக்கொள்வது புலி ஆதரவாளர்கள் மட்டுமேயாகும்.

புலி ஆதரவு புலம்பெயர் சமூகமேயாகும்.இவ்வாறு கதைகளைக் கூறி மேலும் நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என கபில ஹெந்தாவிதாரன தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. 100%100 இதுதான் உண்மைத்தன்மை அப்பாவி மக்களிடம் இருந்து பணம் சுரண்டுவதுதான்

    ReplyDelete
  2. மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு தீவிரவாதிகளும் கடைசி சண்டையில் காலி இனி அவர்கள் இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது .

    ReplyDelete

Powered by Blogger.