Header Ads



கட்டாயம் வரவேண்டும் - ஜனாதிபதி தலைமையில் தீர்மானம்

கண்டி, கெட்டம்பே மைதானத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு அக்கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் வருகை தரவேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் மத்திய நிறைவேற்றுக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்கள் இன்றி இந்த மே தினக் கூட்டத்துக்கு வரத் தவறுபவர்கள் மீது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய தீர்மானம் மே தினத்துக்குப் பின் எடுக்கப்படுமெனவும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.