Header Ads



இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், நிரம்பிவழியும் மக்கள் கூட்டம்

கொழும்பு நகரின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று -23- நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொழும்பின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை எரிபொருள் தாங்கித் தொகுதி மற்றும் சீனக்குடா எரிபொருள் தொகுதி ஆகியன இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

அவற்றுடன், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் இந்தப் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

எவ்வாறயினும், அநேகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருட்ளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.