குப்பை மேட்டின் கதியே, சுதந்திரக் கட்சிக்கு நேரிடும் - ஜனக பண்டார
மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்கு நேர்ந்த கதியே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் நேரிடும் என கட்சியின் முன்னாள் தம்புள்ள தொகுதி அமைப்பாளர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஜனக பண்டார தென்னக்கோன் சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளா பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அழைப்பாளர் ஒருவரின் மகனே நானாவேன். 1951ம் ஆண்டு கட்சியின் அழைப்பாளராக கடமையாற்றிய ரீ.பி தென்னக்கோன் எனது தந்தையாவார்.
இவ்வாறான மகன்மார் சிலரே தற்போது எஞ்சியுள்ளனர். சமல் ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச மற்றும் தாமே அவ்வாறு எஞ்சியவர்களாவர்.
தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையானது சுதந்திரக் கட்சியின் முடிவினையே பிரதிபலிக்கின்றது. தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்காக மேன்முறையீடு செய்யப் போவதில்லை.
கூட்டு எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசியல் பயணத்தை தொடர உத்தேசித்துள்ளேன். சுதந்திரக் கட்சி நியாயமான கட்சியாக கருதப்படாது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருக்கும் வரையில் அந்தப் பக்கம் நான் செல்லப் போவதில்லை என ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
Post a Comment