'ரணில், சம்பந்தன், ஹக்கீம் மக்களை ஏமாற்றும் நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்'
இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒருபோதும் வராது என உறுதிப்படத் தெரிவிக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ரணில், சம்பந்தன், ஹக்கீம், ஆகியோர் இன்று மக்களை ஏமாற்றும் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்;
இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒரு போதும் கொண்டு வரப்படமாட்டாது. புதிய அரசியலமைப்பு தேவையென ஹக்கீம் கூறுவது வெறுமனே நாடகமாகும். ஏற்கனவே அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளுக்கு அரசாங்கம் உறுதிமொழி வழங்கிவிட்டது.
இன்றைய அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு 13 ஆவது திருத்தம் பலப்படுத்தப்பட்டு காணிஇ பொலிஸ், அதிகாரங்கள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனை வழங்கினால் போதுமானது. அது சமஷ்டிக்கு வழிவகுக்கும்.
இதனையே சம்பந்தன்இ சுமந்திரன் ஆகியோர் எதிர்பார்த்தனர். இன்று அந்த நிகழ்ச்சி நிரல் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதேவேளை ஹக்கீம் அரசுக்கு முன்வைத்த 67 கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
அதில் ஒன்றுதான் கல்முனை நகரை முஸ்லிம் நகரமாக (அலகாக) ஏற்படுத்துவதாகும். ஜே.ஆர். ஜயவர்த்தன மற்றும் பிரேமதாஸ ஆகியோரினால் 13 ஆவது திருத்தத்தை பலப்படுத்தி முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. இன்றைய அரசாங்கம் அதனை நிறைவேற்றவே சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துகிறது என்றார்.
I am not sure about others but Hakeem is expert in making dramas and act to suit any situation which will benefit him financially.
ReplyDelete