Header Ads



'ரணில், சம்­பந்தன், ஹக்கீம் மக்­களை ஏமாற்றும் நாட­கத்தை அரங்­கேற்­று­கின்­றனர்'

இலங்­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒரு­போதும் வராது என உறு­திப்­படத் தெரி­விக்கும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் ரணில், சம்­பந்தன், ஹக்கீம், ஆகியோர் இன்று மக்­களை ஏமாற்றும் நாட­கத்தை அரங்­கேற்றிக் கொண்­டி­ருக்­கின்­றனர் என்றும்  குறிப்­பிட்­டது. 

இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்;

இலங்­கைக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒரு போதும் கொண்டு வரப்­ப­ட­மாட்­டாது. புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை­யென ஹக்கீம் கூறு­வது வெறு­மனே நாட­க­மாகும். ஏற்­க­னவே அமெ­ரிக்கா உட்­பட சர்­வ­தேச  நாடு­க­ளுக்கு அர­சாங்கம் உறு­தி­மொழி வழங்­கி­விட்­டது.

இன்­றைய அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை மேற்­கொண்டு 13 ஆவது திருத்தம்  பலப்­ப­டுத்­தப்­பட்டு காணிஇ பொலிஸ்,  அதி­கா­ரங்கள் வழங்­கப்­படும் என உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இதனை வழங்­கினால் போது­மா­னது.  அது சமஷ்­டிக்கு வழி­வ­குக்கும்.

இத­னையே சம்­பந்தன்இ சுமந்­திரன் ஆகியோர் எதிர்­பார்த்­தனர். இன்று அந்த நிகழ்ச்சி நிரல் நிறை­வேற்­றப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. அதே­வேளை ஹக்கீம் அர­சுக்கு முன்­வைத்த 67 கோரிக்­கை­க­ளையும் அரசு ஏற்றுக் கொண்­டுள்­ளது.

அதில் ஒன்­றுதான் கல்­முனை நகரை முஸ்லிம் நக­ர­மாக (அல­காக) ஏற்­ப­டுத்­து­வ­தாகும்.  ஜே.ஆர். ஜய­வர்த்­தன மற்றும்  பிரே­ம­தாஸ ஆகி­யோ­ரினால்  13  ஆவது திருத்­தத்தை பலப்­ப­டுத்தி முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. இன்றைய அரசாங்கம் அதனை நிறைவேற்றவே சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துகிறது   என்றார். 

1 comment:

  1. I am not sure about others but Hakeem is expert in making dramas and act to suit any situation which will benefit him financially.

    ReplyDelete

Powered by Blogger.