Header Ads



யாழ்ப்பாணத்தில் தேசிய மீலாத் விழா - வீடுகளும் அமைக்கப்படும்


-பாறுக் ஷிஹான்-

தேசிய மீலாதுன் நபி விழாவினை   யாழ்ப்பாணத்தில் இம்முறை  நடாத்த  அரசு முடிவு செய்துள்ளதாக  அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

 யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்   தொடர்பில் அரசாங்க அதிபர் என். வேதநாயகன்  தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில்  இடம்பெற்ற உயர்மட்ட கூட்டத்தில்  கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

  யாழ்ப்பாணத்தில் இம்முறை தேசிய மீலாதுன் நபி விழாவினை    நடாத்த அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது.   தேசிய மீலாதுன் நபி விழாவின் மூலம் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களால் இங்குள்ள  மக்களுக்கு இன்னும் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதுடன்  கலாசார மேம்பாட்டை விருத்தி செய்ய உதவுவதற்கும் இந்த மீலாத்விழா இனநல்லுறவை பேணுவதற்கு வழி வகுக்கும் என்றார் 

அத்துடன்    ஜனாதிபதி மற்றும் பிரதமர் இந்த விழாவில் அதிதிகளாக கலந்துகொள்வர் எனவும் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக  முஸ்லிம் சமயவிவகார அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீமிடம்  தாம் விடுத்த வேண்டுகோளை அடுத்து   அவர்  இந்த விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை  மேற்கொண்டு வருவதை இட்டு  அமைச்சர் தனது நன்றிகளை இதன் போது   வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்வின்  மூலம் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்கள் பெரிதும் நன்மை அடைவர்  என அவர் மேலும்  அங்கு குறிப்பிட்டார்.

மேலும்     யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக இங்கு  நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில்  அவர்களின் பிரச்சினைகள் விரிவாக ஆராயப்பட்டு பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முடிவுகள்  எடுக்கப்பட்டது.


 இங்கு  காணி  இல்லாதவர்களிற்கு   காணிகளை பெற்றுக்கொடுக்கும் வழிமுறைகள்    ஆராயப்பட்டதுடன் வீடுகள் இல்லாதோருக்கு வீடுகளை அமைத்து தர தான் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


இது தவிர தற்போது யாழில்  மீள்குடியேறியுள்ள   முஸ்லிம் மக்களின்  பிரதிநிதிகளுக்கும் அரச அதிபர் மற்றும் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்   சுமூகமாக  அமைந்திருந்தது.

இந்த நிகழ்வில்  அமைச்சரின் யாழ் மாவட்ட மீள் குடியேற்ற இணைப்பாளர்  சுபியான் மௌலவி   அமைச்சரின் இணைப்பு செயலாளர் இர்சாத் ரஹ்மதுல்லாஹ் அமைச்சரின் பொது தொடர்பு அதிகாரி மொஹிடீன் உப்புக்கூட்டுத்தாபண தலைவர் அமீன்    மற்றும் மக்கள் காங்கிரசின் யாழ் மாவட்ட அமைப்பாளர்  அமீன் ஹாஜீயார்    உட்பட பலர் கலந்துகொண்டு கருத்துத்  தெரிவித்தனர்.



No comments

Powered by Blogger.