சந்தர்ப்ப வலி...!
பேனை முனை நாற்றமெடுக்கிறது
சமிபாடடையா பச்சை இறைச்சி
வாந்தி தோற்றுவிடும்!
உண்டு களித்த வாந்தி மீண்டும் மீண்டும் வாந்தியாக!
விடிவுக்காக தேர்ந்தெடுத்து
குரலாயொலிக்க மீயுயர் மன்றம் அனுப்பினோம்!
சொல்வதற்கு வெட்கமாயில்லை?
எங்கள் பல சொத்து பத்துக்கள்
அறாவிலைக்குப்போய்
நோட்டுக்களாக போத்தல்களாக மூட்டைகளுடன்தானே வந்தோம்
உங்கள் முன் மீயுயர் மன்றம் செல்ல!
எங்கள் நோட்டுக்களும்
மது போத்தல்களும் இனிதாகவே
இருந்திருக்கும் அப்போது!
நாங்கள் இத்தருணம்
எதிர்பார்த்து இருந்தோம் வரும்வரை!!
ஐந்தாறாண்டுகள் குத்தகை
இலாப நஷ்டம் பாராமல்
செலுத்தியேவிட்டோம் ஆரம்பத்தில்!
இப்போது எப்படித்தருவோம் இலாபப்பங்கு?
புத்தியாளனை புறந்தள்ளி
சந்தர்ப்பவாதியை சகாவாக ஏற்று
சாமர்த்தியமாக சம்பிரதாயங்களுடன்
மீயுயர் மன்றம் அனுப்பி வைக்கயில்
வலிக்காத நமக்கு
இப்போது எங்கிருந்து வந்தது வலி?
ஒப்பந்தம் புதுப்பிக்க மீண்டும் வருவோம்
அப்போதும் நீங்கள் வரிந்து கட்டி நின்று
நோட்டுக்களையும் போத்தல்களையும்
வாங்கி நிரப்பிக்கொண்டு
மறந்துவிட்டிருப்பீர்கள் எல்லாவற்றையும்
மீண்டும் அனுப்புவீர்கள் மீயுயர் மன்றம்!
Dr அப்துல் ரஷாக் AC
உன்மைதான் டாக்டர் திருந்தாது எமது சமுதாயம்
ReplyDeleteபழைய குருடி கதவைத்திறடியென்று வந்திறங்குவார்கள் அவரவர்களின் புரோக்கர்களுடன் நாரே தக்பீர் என்னும் கோஷத்துடன் கையிலேந்திய சாராயப்போத்தல்களுடன் வாக்குப்பிச்சை கேட்பதற்கு
மக்கள் புரிந்து நடந்தால் சரி!
ReplyDelete