Header Ads



ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை - திஸ்ஸ அத்தநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு தாம் விலகவில்லை என கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். தாம் ஒரு போதும் கட்சியை விட்டு விலகவில்லை எனவும் இன்னமும் தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் எனவும் தெரிவித்துள்ள அவர் ஐக்கிய தேசியக் கட்சி , வேட்பாளர் ஒருவரை நிறுத்தாத காரணத்தினால் தாம் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கட்சியில் மீள இணைந்து கொள்ளுமாறு உத்தியோகப் பற்றற்ற ரீதியில் தமக்கு அழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்த  அத்தநாயக்க  உத்தியோகபூர்வமாக அழைப்பு கிடைத்தன் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் 2020ம் ஆண்டில் வெற்றியீட்ட வேண்டுமாயின் ஐக்கிய தேசியக் கட்சி சில திருத்தங்களை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.