Header Ads



குரங்குகள் மீது, பொலிஸில் முறைப்பாடு - மாத்தறையில் விநோதம்

மாத்தறை கோனஹென்வத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து  பொருட்கள்   திருடப்பட்டமை தொடர்பில் பொலிஸாக்குக் கிடைத்த முறைப்பாட்டின்படி அந்த இடத்துக்குச் சென்று பொலிஸார் ஆராய்ந்த பின்னர் வீட்டு உரிமையாளரான பெண் நேற்று முன்தினம் 10 ஆம் திகதி குரங்குகளுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டாளர் உட்பட குடும்பத்தினர் சுற்றுலா சென்று திரும்பியபோது வீட்டில் உடைகள் மற்றும் வீட்டுப் பொருட்கள் தாறுமாறாக வீசப்பட்டுக் கிடந்துள்ளன.

இதைப் பார்த்த பெண் உடனடியாக தொலைபேசி மூலம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதன் பின்னர் பொலிஸார் வந்துள்ளனர்.

பொலிஸார் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்துக்கு வந்து முறைப்பாடு செய்யும்படி வீட்டு உரிமையாளரான பெண்ணுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னரே அப்பெண் வீட்டுக்குள் குரங்குகளின் காலடிகளைக் கண்டுள்ளார்.  

முறைப்பாட்டாளர் பொலிஸ் நிலையம் சென்று வீட்டுப் பொருட்கள் காணாமற் போகவில்லையென்றும் குரங்குகளே பொருட்களை எடுத்தெறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.