Header Ads



குப்பை மேடு சரிவினால் பாதிக்கப்பட்டவர்க்கு, உதவ வருகிறது ஜப்பான்

கொலன்னாவ, மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் ஜப்பான் அரசாங்கம் தனது கவலையை தெரிவித்துள்ளது.

இப்பிரதேச மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்த விசேட செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் அரசாங்கம் உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது.

இந்த அனர்த்தம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜப்பான் தொழில்நுட்ப நிபுணர் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு வர உள்ளார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. Verygood sign.BATTER TO DO KIND OF IMPRTANT PROJECT.BEFORE PORT CITY OR MEGA CITY OR HIGHWAYS.SRI LANKAN POLITICIANS I DONT KNOW WHY THEY MUCH FOOLISH

    ReplyDelete

Powered by Blogger.