Header Ads



விகா­ரைக் காணியை, முஸ்லிம்கள் பிரித்­தெ­டுத்­து விட்டனர்

(எஸ்.எல். நிசார்) 

இறக்­காமம் மாயக்­கல்லி பிர­தேச விகா­ரைக்­கான காணி பெறும் விடயம் தொடர்­பாக அம்­பாறை மாவட்ட செய­ல­கத்­தில் அர­சாங்க அதிபர் துசித்த வணி­க­சிங்க தலை­மையில் நடை­பெற்ற கூட்டத்தில் ஞானசாரர் பேசுகையில்,

பொத்­துவில் பிர­தே­சத்­தி­லுள்ள முகு­து மாவிகா­ரைக்கு 293 ஏக்கர் காணி உள்­ளது. ஆனால் விகா­ரையின் நிர்மாணப் பணிக்கும் பரா­ம­ரிப்­புக்­கு­மாக 4 ஏக்கர் மட்­டுமே உள்­ளது. மீதி அனைத்தையும் முஸ்லிம் மக்கள் பிரித்­தெ­டுத்­துள்­ளனர். இதே­போன்று சம்பூர் பிர­தே­சத்­திலும் நாம் பல விட்டுக் கொடுப்­பு­க­ளுடன் காணி­களை வழங்கி உள்ளோம். இன்­றைய கட்­டத்தில் காணியைப் பெற்றுக் கொடுப்­பது மாவட்ட செய­லா­ளரின் கட­மை­யாகும்.

மேலும் முஸ்லிம் பள்­ளி­வாசல், இந்து ஆலயம் என்­பன அமைப்­ப­தற்கே உரிய அனு­மதி பெறப்­ப­ட­வேண்டும். ஆனால் பௌத்த விகா­ரைகளுக்கு அவ்­வா­றான அனும­திகள், எதுவும் பெறப்­ப­டா­மலே நிர்மாணப்­ப­ணி­களை  ஆரம்­பிக்­கலாம்.

எனவே மாயக்­கல்லி பிர­தே­சத்­தி­லுள்ள காணிச் சொந்­தக்­கா­ரர்­க­ளுக்கு மாற்றுக் காணி 2 ஏக்கர் வழங்கிவிட்டு விகாரை அமைப்பதற்கான காணியை பெற்றுத்தருவதற்கு மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

2 comments:

  1. கடி நாயைக் கூன்டில் அடைக்காமல் வெளியில் விட்டுக்கொன்டிருந்தால் அது குரைத்துக்கொன்டு எவனயாவது கடிக்கத்தான் பார்க்கும் .......................

    விமலை அடைக்க காரணத்தைத் தேடிக் கொன்டவர்களுக்கு ஞானத்தை அடைக்கவா காரணம் இல்லாமல் போய்விட்டது ????????

    ReplyDelete
  2. பைத்தியக்காரன் உளருகிறான்...

    ReplyDelete

Powered by Blogger.