6 நாட்களில் 16 கோடி வருமானம்
கடந்த வாரம் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக சுமார் ஐந்து இலட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளதாக நெடுஞ்சாலை முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 7ம் திகதி முதல் 13ம் திகதி வரை இந்த வாகன போக்குவரத்து இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் 160 மில்லியன் ரூபா வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளில் 12 சிறு வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இன்றும் நாளையும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு கஹதுடுவ, கொட்டாவ, கொத்தலாவல மற்றும் கடுவெல ஆகிய நுழைவுப் பாதைகளில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படடுள்ளது.
Post a Comment