அடுத்தவரின் பணத்துக்கு ஆசைப்படாத கான்ஸ்டபிளுக்கு 50,000 ரூபா சன்மானம்
அடுத்தவரின் 33,500 ரூபா பணத்துக்கு ஆசைப்படாத பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு ஐம்பதாயிரம் ரூபா சண்மானமாக வழங்கப்பட்டுள்ளது.
DSC_7372புத்தளம் மற்றும் சிலாபம் பொலிஸ் பிரிவுகளில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 2017 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்காக சன்மானம் வழங்கும் வைபவத்தின் போதே குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு இவ்வாறு சன்மானம் வழங்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தனவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு சிலாபம் மைக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள வரவேற்பு மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.
இதன்போது புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபில் எஸ். ஏ. விக்ரமசிங்க என்பவருக்கே சன்மானம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 16 ஆம் திகதி குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடமை நிறைவடைந்து தனது வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நொச்சியாகம பிரதேசத்தில் வீதியில் தவறவிடப்பட்டிருந்த ஒருவரின் பணப்பை பையைக் கண்டெடுத்துள்ளார்.
அந்த பணப்பையை சோதனையிட்ட போது அதனுள் 33,500 ரூபா பணம் இருப்பதைக் கண்டு அதன் உரிமையாளரை அதிலிருந்த ஆவணங்களைக் கொண்டு இனங்கண்ட குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், அந்நபரை நொச்சியாகம பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் அவர் தவறவிட்டிருந்த பணப்பையை ஒப்படைத்துள்ளார். இவ்வாறு தனது பணப்பையை தவற விட்டவர் அப்பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பஸ் வண்டியின் நடத்துனராவார்.
இந்தச் செயலை பாராட்டியே குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு ஐம்பதாயிரம் ரூபா சன்மானம் பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment