Header Ads



மனை­வியை கொலைசெய்து வீட்­டுக்குள் புதைத்தவர், 48 நாட்­க­ளுக்கு பின் கைது

அங்­கு­ரங்­கெத்த பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட  ஹேவா­ஹெட்ட ரொக்வூட் தோட்­டத்தில் மனை­வியை கொலை செய்து வீட்­டுக்குள் புதைத்து வைத்­தி­ருந்தார் என்ற சந்­தே­கத்தின் பேரில் அங்­கு­ரங்­கெத்த பொலி­ஸா­ரினால் தேடப்­பட்டு வந்த பிர­தான சந்­தேக நபர்  48 நாட்­க­ளுக்கு பின்னர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

ரொக்வூட் தோட்­டத்தைச் சேர்ந்த பிர­தான சந்­தேக நபர் தனது முதல் மனைவி வேலை வாய்ப்­புப்­பெற்று வெளி நாடு சென்­றி­ருந்த சந்­தர்ப்­பத்தில் வலப்­பனை மஹா­ஊவா தோட்­டத்தைச் சேர்ந்த சுமித்­திரா என்ற 28 வய­து­டைய  பெண்­ணுடன் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக குடும்பம் நடத்தி வந்­ததில் மூன்று வயதில் ஆண் குழந்­தை­யொன்றும் உள்­ளது.

இந்­நி­லையில் சந்­தேக நபர் பிறிதொரு பெண்­ணு­டனும் காதல் தொடர்பினை பேணி வந்­த­தா­கவும் இதனால் கணவன் மனை­விக்­கி­டையே பிரச்­சி­னைகள் இருந்து வந்­த­தெ­னவும் தெரியவரு­கி­றது

இந் நிலை­யி­லேயே கடந்த  பெப்­ர­வரி மாதம் சந்­தேக நப­ருக்கும் குறித்த பெண்­ணுக்­கு­மி­டையே  சண்டை மூண்­ட­தை­ய­டுத்து குறித்த பெண் கொலை செய்­யப்­பட்டு வீட்­டுக்குள் குழி தோண்டி புதைக்­கப்­பட்­ட­தாக தெரிய வந்­தி­ருந்­தது.

பொலிஸார் குறித்த வீட்­டினை சோத­னை­யிட்டு சந்­தே­கத்­துக்­கி­ட­மான இடத்தை தோண்­டிய பொழுதே  கடந்த பெப்­ர­வரி மாதம் 23 ஆம் திகதி வலப்­பனை மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சுமித்­தி­ராவின் உருக்­கு­லைந்த சடலம் மீட்­கப்­பட்­டது.

மேற்­கு­றிப்­பிட்ட சம்­பவம் தொடர்ப்­பாக நப­ரொ­ருவர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­தோடு தலை மறை­வாக இருந்து வந்த பிர­தான சந்­தேக நபரை அங்­கு­ரங்­கெத்த பொலிஸார் தேடி வந்த இந் நிலையில் குறித்த நபர் கடந்த 12 ஆம் திகதி சந்­தே­கத்தின் பேரில் கண்டி பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு அங்குரங்கெத்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


இதன்போது சந்தேகநபர் வலப்பனை நீதிமன்ற நீதிவானின் உத்தரவுக்கமைய விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.