முஸ்லிம்களின் 2 ஏக்கர் காணியை, விகாரைக்காக சுவீகரிக்கத் தீர்மானம்
ARA.Fareel - விடிவெள்ளி
இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாயக்கல்லி மலையடிவாரத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் காணியை பௌத்த விகாரை நிர்மாணிப்பதற்கு வழங்குவதற்கு அம்பாறை கச்சேரியில் நேற்றுக் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மாணிக்கமடு மாயக்கல்லி மலையடிவாரத்தில் பன்சலைக்காக அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படவுள்ள முஸ்லிம்கள் இருவருக்குச் சொந்தமான காணிகளுக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்படவுள்ளன.
அம்பாறை கச்சேரியில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் மாணிக்கமடு மாயக்கல்லி மலையடிவார காணி தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் இறக்காமம் பிரதேச செயலாளர் பொலிஸ் உயரதிகாரிகள், காணி ஆணையாளர் மற்றும் உயரதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பொதுபலசேனா அமைப்பு, சிங்கள ராவய என்பனவற்றின் பிரதிநிதிகள், மாணிக்கமடு பரிவார சைத்திய ராஜமகாவிகாரை அதிபதி அம்பகஹபிட்டியே சீலரத்ன தேரர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
'பன்சலைக்காக சுவீகரிக்கப்படவுள்ள 2 ஏக்கர் காணியின் சொந்தக்காரர்களான முஸ்லிம்கள் இருவரும் நாளை (இன்று) இறக்காமம் பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். உதவி காணி ஆணையாளர் இவ்விருவருடனும் காணி தொடர்பாகவும் மாற்றுக்காணி தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளார்' என இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
அம்பகஹபிட்டியே சீலரத்ன தேரர்
தீகவாபி மாணிக்கமடு பரிவார சைத்திய ரஜமகாவிகாரையின் மகாநாயக்க அம்பகஹபிட்டியே சீலரத்ன தேரர் மாயக்கல்லி மலையடிவார காணி விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளமை தமக்குக் கிடைத்த வெற்றி எனவும் எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி குறிப்பிட்ட காணியில் பூஜை வழிபாடுகள் மற்றும் மத சடங்குகள் நடத்தப்படவுள்ளதாகவும், அரசாங்க அதிபரின் எழுத்துமூல உத்தரவு கிடைத்ததும் விகாரை நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இது பௌத்த நாடு. எமக்குச் சொந்தமான காணியில் விகாரை அமைப்பதற்கு எவராலும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
பொதுபலசேனா செயலாளர் ஞானசார தேரர்
பொதுபலசேனா அமைப்பின் ஞானசார தேரர் 'கிழக்கில் பல இடங்களில் முஸ்லிம்கள் தொல்பொருள் வரலாற்றுப் பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். இக்காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட வேண்டும். மாயக்கல்லியில் நீதிநிலைநாட்டப்பட்டுள்ளது.' என்று தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் திணைக்கள உதவிப் பணிப்பாளர்
தொல்பொருள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் நீல் மல் கொட விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில்; தொல்பொருள் திணைக்களம் மாயக்கல்லி மலையடிவாரத்தில் தொல்பொருள் பகுதிகளை எல்லையிட்டு சுற்றிவர வேலியிட்டுள்ளது. இந்த எல்லைக்குள் நிர்மாணப் பணிகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது. காணி ஆணையாளரினால் எல்லையிட்டு வழங்கப்படும் பகுதியிலே விகாரை நிர்மாணிக்க முடியும் என்றார்.
All dogs are same dogs. Where is justice for the minority?
ReplyDeleteOnce up on a time Muslims were part and parcel of rulers. That means Muslims made decisions with the rulers. Muslims' ideas were reflected in government policy making mechanism. This was Buddiudin Muhammed's time.
Then Muslims became king makers. Their some demands were met by the government. Government listen to Muslims and implemented some of their demand. Its Ashrof's time.
Now, Muslim politician became dogs and looking for bone. Majority ate all the meat and through bones to these dogs. Government pertain to be listening and do not meet any of Muslim demand including their safety and well-being.
In 5 to 10 years time government will not even pertain to listen Muslim. Buddhist are the law makers, rulers and well to do in everything including money, education. land ownership, business, trading etc.
Where are we going to end up with????? Let Allah protect us.