Header Ads



சுதந்திரக் கட்சிக்கு 2 புதிய, முஸ்லிம் அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக எஸ். கஜந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக எம்.எஸ்.சுபைர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு புதிய அமைப்பாளர்களுக்கு நியமனக் கடிதங்களை கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று -23- வழங்கினார்.

இந்த நிகழ்வு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வசஸ்தலத்தில் நடைபெற்றது.

இதனடிப்படையில், சுமுது விஜேவர்தன கொழும்பு மாவட்ட அமைப்பாளராகவும், ஆர்.எம்.சனத் பத்மசிறி மற்றும் ஏ.ஏ.ஏ. லத்தீப் ஆகியோர் குருணாகல் மாவட்ட அமைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கே.பி. பிரியந்த பிரேமகுமார, திருகோணமலை மாவட்ட அமைப்பாளராகவும் ரசிக தேசப்பிரிய ரத்நாயக்க பதுளை மாவட்ட அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.