மியன்மார் திருவிழாவில் 285 பேர் பலி, 1,073 பேர் காயம்
மியன்மாரில் நடைபெற்ற தண்ணீர் திருவிழாவில், 285 பேர் உயிரிழந்துள்ளனர். 1,073 பேர் காயமடைந்துள்ளனர்.
மியன்மாரில் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு, பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. அதில் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் அடித்து விளையாடும் தண்ணீர் திருவிழாவும் அடங்கும்.
அவ்வாறு செய்வதன்மூலம் தங்கள் மீதான பாவங்கள் நீங்கும் எனவும், குறைகள் போக்கப்பட்டு புதிய வாழ்வு மலரும் எனவும் நம்புகின்றனர். இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்களாக தண்ணீர் திருவிழா கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட விபத்துக்களால், 285 பேர் மியன்மாரின் பல பாகங்களிலும் உயிரிழந்தனர்.
யாங்கூன் பகுதியில் 44 பேரும், மண்டாலே பகுதியில் 36 பேரும் நய் பி டோ பகுதியில் 10 பேரும் சகைங் பகுதியில் 26 பேரும் தனின்தர்யி பகுதியில் 11 பேரும் பகோ பகுதியில் 37 பேரும் மக்வே பகுதியில் 11 பேரும் மொன் மாநிலத்தில் 20 பேரும் ரகின் பகுதி யில் 17 பேரும் ஷன் மாநிலத்தில் 29 பேரும் அயெயாவட்டி பிராந்தியத்தில் 28 பேரும் இறந்துள்ளனர்.
அதேநேரம் கொலை, கார் விபத்து, போதைப் பொருள் பயன்பாடு, ஆயுதங்கள் பயன்பாடு, கலவரம் என 1,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நிகழ்ந்த விபத்தில், 272 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,086 பேர் படுகாயமடைந்தனர்.
"முஸ்லிம்களை கொன்றவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனை" அப்டீன்னு ஒரு கொமன்டையும் காணோமே.... அப்போ யாரைக் கொன்றதற்காக முஸ்லிம்களை உலகில் அதிகம் அதிகம் மரணிக்க செய்து அல்லாஹ் தண்டிக்கின்றான்?
ReplyDeleteLook like dangerous people living in Miyaar.
ReplyDeleteMr.Noordeen அவரகளே;உங்களின் கேள்வியோடு அமைந்த பின்னூட்டம் நீங்கள் ஒரு முஸ்லிமா அல்லது அந்த பெயரில் உலாவும் வெளிச்சமா என்ற கௌள்வி எழுகின்றன.முஸ்லிம்கள் அனியாயமாக கொல்லப்படும் இக்காலத்ல் இவ்வாறான கொடியவர்களுக்கு சில சோதிப்பு தண்டனையை கொடுப்பது ஒரு படிப்பினையாகவே அமையும்.இந்த விடயத்தில்,நாம்பெருமைப்படா விட்டாலும் அங்கு பாதிக்கப்பட்டவனின் இடத்தில் இருந்து யோசனை செய்தான் புரியும் .அநியாயமாக கொல்லப்படும் முஸ்லிம்கள் ,அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக கொல்லப்படுகின்றார்கள்,இந்த அநீதியை தட்டிக் கேட்க தகுயற்றுப்போய் இருக்கும் நம் சமூதாயம் அநியாயக்காறனுக்கு வக்காலத்து வாங்கும் விதமாக பின்னூட்டங்கள் எழுதுவது ஒரு தரங்கெட்ட செயல்,என்பது மட்டுமல்லாமல் முஸ்லீம்களுக்கு அல்லாஹ் செய்யும் உதவியை கொச்சைப்படுத்தும் விதமாகவே இருக்கிறது,வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நம்மவார்கள் இருக்கும் வரை இந்த சமூதாயம் தலை நிமிர்வது கடினம்,வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது அம்முஸ்லீம் பச்ச பாலகர்கள் என்ன குற்றம் செய்தார்கள்,கடைசி நிலை என்ன என்பது இந்த உலகம் அறிந்து கொண்டது.கொல்லப்படும் முஸ்லிம்கள் ஷஹீதுகளுடைய அந்தஸ்தை பெறலாம் ஆனால் அநியாயகாறனின் முடிவு அதி பயங்கரமானதாகவே இருக்கும்,
ReplyDeleteBro. Noordeen
ReplyDeleteஅது அல்லாஹ்வின் தண்டனையல்ல. சோதனை அதில் பொறுமை காப்பவர்களுக்கு மறுமையில் வெகுமதி. இன்ஷா அல்லாஹ்
வெறும் பெயர் தாங்கி முஸ்லிமாக இல்லாமல் இஸ்லாத்தை உருப்படியா .கற்று கடைபிடிக்க முயற்சியுங்கள்.