மீதொட்டுமுல்லை அவலம்: பலி எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தம் காரணமாக காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார் எனபொலிஸார்தெரிவித்துள்ளனர்.
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடந்த 14ம் திகதி புதுவருட நாளன்று இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் வீடுகளுக்கிடையில்சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.
Post a Comment