கொழும்பு குப்பைகளை தொம்பேயில் கொட்டாதே என போராட்டம் - 15 பேர் கைது
கொழும்பில் இருந்து கொண்டுச் செல்லப்படும் குப்பைகளை தொம்பே பகுதியில் கொட்ட வேண்டாம் என கூறி தொம்பே பிரதேச மக்கள் டயர்களை எரித்து பாதைகளை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கலகம் அடக்கும் பொலிஸார் 15 பேரை கைது செய்துள்ளனர்.
இதேவேளை குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் மையம் ஒன்று தென்கொரியாவால் தொம்பே பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதோடு தற்போது காணப்படும் குப்பைகளின் அளவை விட 50 டொன் குப்பைகளை இங்கு சேகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் பிரதேச மக்கள் இங்கு குப்பைகளை கொட்ட வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Post a Comment