முதலையின் வயிற்றுக்குள், 13 வயது சிறுமியின் சடலம்
கல்னேவ, முலன்நடுவ குளத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது முதலைக்கு இரையான 13 வயது சிறுமியின் சடலம் முதலையின் வயிற்றுக்குள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதி இரவு, தமது பெற்றோர் மற்றும் அருகிலுள்ள ஏனைய பிள்ளைகளுடன் குறித்த சிறுமி அந்தக் குளத்தில் நீராடச் சென்றபோது காணாமல் போயுள்ளார்.
கல்னேவ மத்திய மகா வித்தியாலயத்தில் 7 தரத்தில் பயிலும் கோலுகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த எஸ்.எம்.கிமிஹானி அனுஷிகா என்ற சிறுமியை இவ்வாறு முதலைக்கு இரையாகியுள்ளார்.
வழமைப் போல் பெற்றோர் மற்றும் அயலவர்களுடன் நேற்றிரவு 7 மணியளவில் முலன்நட்டுவ குளத்தில் சிறுமி நீராடிச் சென்றுள்ளார்.
குளித்து கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். சிறுமி காணாமல் போன இடத்தில் நீர் குமிழிகள் வெளிப்பட்டதாக சிறுமியின் தாய் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பிரதேச மக்களும், கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில், குறித்த குளத்தில் இருந்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, முதலையின் வயிற்றுப்பகுதியை அவதானித்து, அதில் சிறுமியின் சடலம் இருப்பது அவதானிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முதலைக்கு இரையான சிறுமியின் பிறந்த தினம் எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி கொண்டாடப்படவிருந்ததாக உறவினர்கள் கூறியுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment