Header Ads



கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் விழுந்த, இளைஞனின் நிலைமை கவலைக்கிடம்

பதுளை நகரிலுள்ள உணவகம் ஒன்றுக்கு, உணவு உண்ணச் சென்ற இளைஞரொருவர், திடீரென மயங்கி, கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் விழுந்த பரிதாபச் சம்பவமொன்று, இன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞன், பலத்த சூட்டுக்காயங்களுடன், பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதுளை, தெல்பெத்த பெருந்தோட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞனே, இவ்விபரீதச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார். மேற்படி இளைஞன், வடை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எண்ணெய் சட்டிக்குள் விழுந்துள்ளதாக தெரியவருகிறது. 

இவரது நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2 comments:

Powered by Blogger.