Header Ads



காத்தான்குடி மோதல் - சட்டத்தை நிலைநாட்ட, முஸ்லிம் கவுன்சில் கோரிக்கை


காத்தான்குடியில் 2 குழுக்களிடையே நடைபெற்ற மோதல் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்டுமாறு முஸ்லிம் கவுன்சில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காத்தான்குடி மோதல் தொடர்பில் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுள்ளன. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் காத்தான்குடியில் இந்த மோதலானது முஸ்லிம்களுக்கு இடையிலான மோதலாக சித்திகரிக்கப்படுகிறது. நாம் இந்த மோதலை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே 2 குழுக்களிடையே நடைபெற்ற இந்த மோதல் சம்பவத்துர்டன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும்படி வேண்டுகிறோம்.

No comments

Powered by Blogger.