ஹோமாகமயில் வைத்தியசாலையில், இப்படியும் நடந்தது
ஹோமாகம வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு துணையாக தங்கியிருந்த பெண் ஒருவரை காதல் வலையில் வீழத்தி அவரிடமிருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிச் சென்றதாக அதே வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு துணையாக இருந்த நபரொருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயை கவனித்துக் கொள்வதற்காக அங்கு தங்கியிருந்த 52 வயதான பெண் ஒருவர், தனது தாய் தங்கியிருந்த கட்டிலையடுத்து தங்கியிருந்த நோயாளியை கவனித்துக் கொள்வதற்காக இருந்த 32 வயதான ஆண் ஒருவருடன் காதல் தொடர்பை பேணியுள்ளார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் விடுதி ஒன்றுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். அதன்போது குறித்த ஆண், தான் நாளை திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அதற்கு தன்னிடம் போதியளவு பணம் இல்லையெனவும் அப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
இதன்போது அப்பெண் தன்னிடமிருந்த 10 ஆயிரம் ரூபா பணத்தினை அவரிடம் கொடுத்ததுடன் தங்கச் சங்கிலியையும் கொடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.
அவற்றைப் பெற்றுக்கொண்ட அந்நபர், இரண்டு நாட்களில் நோயாளியை கவனித்துக் கொள்வதற்காக மீண்டும் வைத்தியசாலைக்கு திரும்பிவருவதாக அப்பெண்ணிடம் உறுதியளித்துவிட்டு சென்றிருந்த போதிலும் அவர் திரும்பியிருக்காத காரணத்தினால் குறித்த பெண் தனது 19 வயதான மகனுடன் இதுதொடர்பில் முறைப்பாடு செய்ய கொட்டாவ பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார்.
எனினும், அவரது காதலன் பற்றிய எவ்வித தகவல்களையும் அறிந்திராத காரணத்தினால் முறைப்பாட்டை விசாரிக்க முடியாதெனவும், அவரை பற்றிய தகவல்களை தெரிந்துகொண்டு, மீண்டும் வந்து முறைப்பாடு செய்யுமாறும் கொட்டாவ பொலிஸார் அப்பெண்ணுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
Post a Comment