Header Ads



கொழும்பில் குப்பை போடாதே - வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்


இன்று (06) காலை முதல், மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் காரணமாக கொழும்பு – அவிசாவளை வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மீதொட்டமுல்ல பகுதியில் பல வருடங்களாக கொட்டப்பட்டு வரும் குப்பைகள் காரணமாக பொதுமக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாக தெரிவித்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் உள்ளிட்ட பலர கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஒருகொடவத்தை பழைய வீதிக்கு நுழையும் இடத்திலிருந்து வெல்லம்பிட்டிய சந்தி வரையான கொழும்பு - அவிசாவளை பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகனசாரதிகள், முடியுமான வரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.