நஸ்பியா அஜித்தின் 'அவலங்கள்' நாவல், யாழ்ப்பாணத்தில் வெளியீடு
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி ஆசிரியையுமான திருமதி. நஸ்பியா அஜித்தின் 'அவலங்கள்' நாவல் நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இவர் ஏற்கனவே கண்ணீர்ப்பூக்கள், சிதறல்களில் சில துளிகள் ஆகிய நாவல்களை வெளியிட்டுள்ளார்.
யாழ். உலமாசபைத் தலைவர் ஏ.எம். அஸீஸ் மற்றும் பிற மதத் தலைவர்களின் இறைவணக்கத்துடன் ஆரம்பமான 'அவலங்கள்' நாவல் வெளியீட்டு நிகழ்வில் யாழ். கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை பிரதி அதிபர் எஸ்.. லலீசன் நூலாய்வுரையையும், கவிஞர் கலாபூஷணம் யாழ் அஸீம் வாழ்த்துரையையும் வழங்கினர்.
பிரதம அதிதியும் யாழ் பிரதேச செயலாளருமான பொ. தயானந்தன் நூலினை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
Post a Comment