பர்சாத் மன்சூரின் ஜனாஸா, திங்களன்று நல்லடக்கம்
-எம்.ஜே.எம். தாஜுதீன்-
அவுஸ்திரேலியாவில் படுகொலை செய்யப்பட்ட பலஹத்துறையைச் சேர்ந்த பர்சாத் மன்சூரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் திங்கட்கிழமை (20) இடம்பெறும் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைகள் முடிவடைந்துள்ளதால் நல்லடக்கத்துக்காக ஜனாஸாவைக் கையளிக்க மரண விசாரணை அதிகாரி இணக்கம் தெரிவித்துள்ளார்.
நல்லடக்க முழு செலவையும் அவுஸ்திரேலிய அரசாங்கமே பொறுப்பேற்று நடாத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் ஜனாஸா நலன்புரிச் சங்கம் நேற்று ஜனாஸாவைப் பொறுப்பேற்றதாகவும் எனினும் குழி தோண்டும் இயந்திரம் பழுதடைந்ததில் திங்கட்கிழமைக்கு நல்லடக்கம் பிற்போடப்பட்டதாகவும் பர்சாத் மன்சூரின் குடும்ப உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment