Header Ads



இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த கப்பலும், அதில் இருந்த எட்டு இலங்கை பணியாளர்களும் கப்பம் எதுவும் இன்றி இன்று (17) அதிகாலை 1:30 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கப்பல் ஒலூலா நகர கடற்பரப்புக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீட்க சோமாலிய படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்த மோதலின் போது ஹபோ நகரில் இரண்டு பேர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. எனினும் தாக்குதல்களை நிறுத்துமாறு கப்பல் தலைவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னர் படையினருக்கும், சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கடற்கொள்ளையர்கள் கப்பலையும், எட்டு இலங்கை பணியாளர்களும் விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டுகளில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் 50 கப்பல்கள் வரையில் கடத்தப்பட்டு, ஆயிரத்துக்கும் அதிகமான கடலோடிகள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டதுடன், 7 பில்லியன் டொலர்கள் வரையில் நட்டம் ஏற்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, மீட்கப்பட்ட கப்பலும், அதில் இருந்த எட்டு இலங்கை கடலோடிகளும் தற்போது சோமாலியாவின் பொசாசோ நகர துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.