Header Ads



தொலை­பே­சி­யினால் நீதி­மன்­றத்­தினுள், புகைப்­படம் எடுத்தவர் கைது

மட்­டக்­க­ளப்பு நீதி­மன்­றத்­தினுள் கைய­டக்க தொலை­பே­சி­யினால் புகைப்­படம் எடுத்த காத்­தான்­கு­டியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்டு அப­ராதம் விதிக்­கப்­பட்டுள்ளது.

மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்­றத்­திற்குள் நேற்று முன்தினம் காத்­தான்­கு­டியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது கை­யடக்க தொலை­பே­சி­யினால் புகைப்­படம் எடுத்­துள்ளார். 

இதை அவ­தா­னித்த நீதி­மன்ற பொலிஸார் குறித்த நபரை கைது செய்­த­துடன் நீதி­மன்றம் முடியும் வரைக்கும் நீதி­மன்ற சிறைக் கூடத்தில் தடுத்து வைக்­கப்­பட்­ட­துடன் அவ­ருக்கு ஆயிரம் ரூபா அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது.

அத்­தோடு அவரின் கை­யடக்க தொலை­பே­சியில் இருந்த சிம்மும் பறி­முதல் செய்­யப்­பட்­ட­துடன் அப­ராத தொகையை செலுத்­திய பின்னர் நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் முடிவுற்ற நேரத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.