Header Ads



விமலின் உண்ணாவிரதத்தை, மஹிந்த பார்த்துக்கொள்வார் - தலதா

விமல் வீரவங்ச உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு மிகவும் பிரபலமானவர் எனவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அது குறித்து கவனத்தை செலுத்துவார் எனவும் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

ஹொரவப்பொத்தனை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சாதாரணமாக வீரவங்ச இவற்றுக்கு பிரபலமானவர். ஐக்கிய நாடுகளின் பிரதான அலுலவகத்திற்கு எதிரிலும் அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருந்தார்.

இதன் போது மகிந்த ராஜபக்ச அங்கு சென்று பழச்சாற்றை பருக கொடுத்ததும் எல்லாம் சரியானது. இதனால், இதனையும் மகிந்த ராஜபக்ச பார்த்துக்கொள்வார் என தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.